எதையும் தாங்கும் இதயம்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
இந்தக் கவிதை வரிகளின்படி வாழ்ந்து காட்டியவர் அண்ணா.

எனக்கோ எதையும் தாங்கும் இதயம் வேண்டும்
என்ற கவிதை மனப்பாடம் தம்பிக்கு கடிதம் 24.07.1960

ஓர் தலைவனைப் பற்றிய இலக்கணம் கூறுகிறார் அண்ணா
சட்டியில் காய்கறி வேகுகிறது. அடுப்பின் வெப்பத்தை சட்டி தாங்கிக் கொண்டு வேண்டிய வெப்பத்தை மட்டும் கொடுத்து, காய்கறி வேகுகிறது. தலைவன் சட்டியைப் போன்றவன். எதையும் தாங்க வேண்டும்.
கைதி எண் 6342, 14.03.1964.

கழகத்தின் சார்பில் எடுக்கப்படும் எந்த முடிவும் நான் என்னிச்சையாகவோ எனக்கு ஏற்படக்கூடிய விருப்பு வெறுப்பினை மட்டும் கணக்கிட்டோ மேற்கொள்வதில்லை என்றாலும் எனக்கென்று ஏதேனும் ஒரு விருப்பம் எழுகின்றது என்றால் அதை நிறைவேற்றிவைக்கும் விருப்பம் கழத்தினர் சிலருக்கு இருப்பதில்லை என்பதை பல சந்தர்ப்பங்களில் நான் உணர்ந்து வருகிறேன். உணர்ந்து என்ன பயன்? காரணம் என்ன என்று ஆராய்வதிலேதான் என்ன பயன்? நிலமை இவ்விதம், அவ்வளவுதான்.
தம்பிக்கு கடிதம், 15.11.1964.

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.