அண்ணாவின் தொலை நோக்குகள்
( டாக்டர். அண்ணா பரிமளம் )

அவர் (பெரியார்) நன்றாக வாழட்டும். சீனக்கிழவனைப்போல் பர்மிய நாட்டு வயோதிகனைப்போல் வாழட்டும், இன்னும் காந்தியார் விரும்பியதுபோல் (125 வயது வரை) வாழட்டும். திராவிட முன்னேற்றக் கழகப் பெரும்பணியை கண்களால் காணட்டும். அவர் கொள்கைத்திட்டம் நம்மால் நிறைவேற்றப்படுவதை கண்டுகளிக்கட்டும்.
(திராவிட முன்னேற்றக் கழகத் தொடக்க விழா பொழிவு - 17.09.1949)

இன்னும் கொஞ்ச நாட்களில் இது விளங்கிவிடும். புத்தம் புதிய தொழிற்சாலைகள் வட நாட்டவரால் திராவிடத்தில் தொடக்கப்படும்போது, வடநாட்டவரை அலட்சியம் செய்து, இங்கு தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டாலும், விரைவிலே இவை வடநாட்டவரிடம் சிக்கிவிடப்போவது உண்மை.
(தி.மு.க.தொடக்க விழாவில் - 17.09.1949)

இன்று இருப்பதிலே நாங்கள்தான் மிதவாதிகள். இது தெறியும் உனக்கு? எங்களுக்கு பின்னால் இருப்பது புயல். (சாதிபேதம் சாகும் வரை - பொழிவு - 30.06.1950)

ஜமீனைப் பற்றி எழுதும்போது நடப்பது என்ன? ஒரு வார்த்தை வேண்டுமானால் நடப்பது தர்பார் என்று கூறிவிடலாம். இரண்டு வார்த்தைத் தேவையா? காட்டு ராஜாங்கம். ( யார் கேட்க முடியும்? - 1947)

பெரியார் நம்மை எவ்வளவு தான் தாக்கிப் பேசினாலும் தளராத பொறுமையுடன் நாம் மேற்கொண்ட பணியில் வெற்றிப்பெறுவோமேயானால் பெரியார் அவர்களும் போற்றிப் புகழ்வது திண்ணம்.
(வாழ்க வசவாளர் - கட்டுரை, திராவிடநாடு-கிழமை இதழ் - 02.12.1951)

எந்த இயக்கமும் பெற முடியாத செல்வாக்கும் சிறப்பும் பெற்று விளங்குகிறது திராவிட முன்னேற்றக் கழகம். நேரமும், சந்தர்பமும் கிடைத்தால், ஜனநாயக முறைகளுக்கு உட்பட்டு ஆளும் கட்சியை அகற்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்கக் கூடிய வலிமையும் வாய்ப்பும் பெற்ற உன்னத அமைப்பாகும்.
(நம்நாடு - நாளிதழ், 17.08.1952)

தமிழில் அர்ச்சனை
அர்ச்சனைத் தமிழில் என்று இன்று கூறுகிறார்கள். சரி என்று ஒப்புக்கொண்டால் அத்துடன் நிற்குமா? அர்ச்சகர்கள் ஏன் தமிழர்களே இருத்தல் கூடாது என்று கேட்பர். அத்துடன் நில்லாது ஆலயத்தில் அவரவர்கென்று தொழுகை நடத்தி வரலாமே, இதற்கு அர்ச்சகர் என்றொரு தரகர் எதற்கு என்று கேட்பார்கள் - பித்தம் வேகமாக வளரும். இது அர்ச்சகரின் எண்ணம். அவர்கள் எண்ணுவது அடியோடு தவறு என்று கூறிவிட முடியாது. காற்று அப்படித்தான் அடிக்கும்.
(அர்ச்சனை - கட்டுரை, திராவிடநாடு- கிழமை இதழ், 08.05.1955)

தம்பி நாமென்ன கண்டோம்? இன்று நமக்கு விரோதம் செய்யும் காங்சிரஸ்காரர்களிலே எத்தனைப் பேர் எதிர்காலத்தில் நமது கிளைக்கழகச் செயலாளர்களாகப் போகிறார்களோ.
(திராவிடநாடு, கிழமை இதழ், 19.02.1956)

கட்டாய இந்தி கல்லறை சென்றுவிட்டது. கபட இந்திதான் காலாட்டம் நடத்துகிறது.
(திராவிடநாடு, கிழமை இதழ், 22.04.1956)

தமிழர்தம் இன உணர்வை அழிக்க முடியாது. (ஓட்டுச்சாவடி போகும் முன்பு, 30.12.1956 - திராவிடநாடு, கிழமை இதழ்)

எனக்கு மட்டும் ஆயுள் இருந்தால் இந்தத் தமிழ் நாட்டின் அரசு என் கைக்கு வராமல் போகாது. (அறிஞர் அண்ணா - காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் தெருவில் - 1957 தேர்தலின்போது பேசிய பொதுக் கூட்டத்தில்.)

இந்த நாராசத்தை எடுத்தெடுத்து வீசுங்கள். அப்போதுதான் சூடும், சுறுசுறுப்பும் நிரம்ப கிடைக்கும். கிடைக்கப்பெற்றால்தான் இன்றைய 15 நாளை 50 அல்லது 60 ஆகும்.
(படமும் பாடமும் - 31.03.1957, திராவிடநாடு, கிழமை இதழ்)

நாட்டுப் பிரிவினைத் தடைச்சட்டம் பற்றி . . .
எந்தப் பிரச்சினை மீது விவாதம் நடந்தாலும் அண்ணாதுரையும் அவர் சகாக்களும் தனி நாடு கோரிக்கை குறித்துத்தான் பேசுகிறார்கள் என்று டைம்ஸ் ஆப் இந்தியா (வட நாட்டு ஆங்கில இதழ்) எழுதுகிறது. . . வடநாட்டு இதழ்கள் இது போல எழுதுவதிலே ஒரு உட்ப்பொருள் நிச்சயமாக இருக்கிறது. . . இது நாள்வரை சதுக்கங்களில் திடல்களில் எழுப்பப்பட்ட முழக்கம் இப்போது சட்டசபையில் கேட்கப் படுகிறது. ஆகவே இது உடனடியாக ஒழிக்கப்படவேண்டியவை ஆகும். அவசரமாக நடவடிக்கை எடுத்து இவர்களை ஒடுக்குங்கள் - காலம் - கடந்துவிடும் முன் காரிய மாற்றுங்கள் - என்று தில்லி அரசுக்கு கலக மூட்டுகிறார்கள் என்பது தான் இத்தனை ஏடுகளும் இது குறித்து எழுதுவதிலே உள்ள உன்பொருள் என்று நான் எண்ணுகிறேன்.
இன்றய பகைவர் நாளைய நண்பர் (28.07.1957 - திராவிட நாடு இதழ்)

1957 - 1967
இந்தப் பத்தாண்டிலே நாம் செய்கின்ற முயற்சி தோற்றுவிட்டால், பிறகு நீங்கள் கல்லின் மேலே பொறித்து வைத்துக் கொள்வதுபோல் தெளிவாக எழுதி வைத்துக் கொள்ளலாம். ஆப்பிரிக்க நாட்டிலே இருக்கிற நீக்ரோக்களும், அமெரிக்க நாட்டிலே இருக்கிற சிகப்பிந்தியர்களும் எந்த கதியை அடைந்தார்ளோ, அதே கதிதான் இங்கே பிறந்து வாழ்ந்து வருகின்ற பழந்தமிழ் மகனுக்குக் கிடைகுமே தவிர வேறு எந்த மாதிரி முற்போக்கும் கிடையாது. . .

1967 என்பது இப்போது நடந்து செல்லுகின்ற பாதையில் நம்மை ஒரு முக்கியமான கட்டத்திற்கு அழைத்துவர இருக்கின்றது.

1957 ல் நமக்கிருக்கின்ற இந்த வளர்ச்சி 1967 ல் நாமே கண்டு ஆச்சர்யப்படத்தக்க அளவிற்கு மிக அதிகமான வளர்ச்சியாகப்போகின்றது. இதிலே யாருக்கும் ஐயம் தேவையில்லை.
மதுரை மாநகரில் பொதுக்கூட்ட சொற்பொழிவு - 11.08.1957

காங்கிரசார் 1957 ல் சரியான எதிர்க் கட்சியில்லை என்று திராவிட முன்னேற்றக் கழகத்தை பார்த்து சொன்ன போது அண்ணா இப்படி விடையளித்தார்.

நீங்கள் எதிர்கட்சி சரியில்லை என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரைவில் நீங்களே அந்தக் குறையையும் போக்கிவிடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன்.

அடுத்தபடியாக அமைச்சரவையிலே அமரும் வாய்ப்பும் நாங்கள் பெற்றிருக்கிறோம்.
திரு அல்லிக்கேணி பொதுக்கூட்டம் - நம்நாடு நாளிதழ்

தம்பி ஒன்றை மறந்துவிடு, மற்ற இரண்டை மறவாதிரு.
உன்னையும் என்னையும் ஒழித்திட எண்ணி உலாவிடும் போகினர், உமிழ்ந்திடும் நூற்றலை மறந்துவிடு. அவரும் கூட, தாய்த்திரு நாட்டின் திருவை, திறத்தை மறந்திட இயலாதிருப்பதை மறவாதிரு. அத் திருநாடு அரசு இழந்ததால் அனைத்தும் இழந்து ஆயிரம் கல் அகன்றுக் கிடக்கும் தில்லி நோக்கி தெற்கும் கிரந்திடும் நிலைதனை கூறினேம். . . . இவர்களும் உணர்ந்தனர். உன் சொல் வென்றது என்று உண்மையை மறவாதிரு. - ஏழைச் சொல் அம்பலமேறிவிட்டது - 01.05.1960

. . . இத்தனைக்கும் வடநாட்டாருக்குள்ளேயே நேரு ரொம்பவும் யோக்யமானவர், கருணையுள்ளவர், என்று பெயர். இவரே ரோம் நகரம் எரியும் போது பிடில் வசித்த நீக்ரோவாகிவிட்டார் என்றால் வாரிசுகள் எப்படி இருப்பார்கள் என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம்.
குற்றம் பார்க்கில் சுற்றமில்லை - திராவிட நாடு - கிழமை இதழ், 23.04.1961

இனி ஒரு புதிய சட்டமே செய்து நாட்டுப் பிரிவினை கேட்போரை கடுஞ்சிறையில் தள்ள யோசனை கூறக்கூடும்.
இந்தியர் ஆகின்றனர் - திராவிட நாடு கிழமை இதழ் . 28.05.1961

. . . காங்கிரஸ் தோற்கும்போது தெரியும் எனக்கு அப்போதே, கதர்க் கதர்னு கத்தினபோதே தெரியும்.
என்று சொல்லிவிட்டு, பெரியார் சந்தோஷம் கொண்டாடுவார் அது அவருடைய சுபாவம்.
தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன் - திராவிட நாடு கிழமை கிழமை இதழ், 03.12.61

என்றைக்காவது ஒரு நாள் இது (தனி நாடு பிரிவினைத் தடைச்சட்டம்) வந்து துரவேண்டிய நிலமை. எதிர் பிக்கிடப்பவன் கோழை.
சூடும் சுவையும் திராவிட நாடு கிழமை இதழ், 10.06.1962

இந்த மன்றத்தின் முன் (இந்திய பாரளுமன்ற நாங்கள்தான் மேலவை) இறுதி கூறுகிறேன். நாங்கள்தான் சென்னையில் இருந்து வரப்போகும் ஆளுங்கட்சி.
தில்லியில், 03.02.1963

கடிதம் வளருகிறது, எதிர்ப்புக்கிடையில் என்பது மட்டுமல்ல, பரவலாக ஓர் எண்ணம் நாட்டு மக்களிடம் ஒரு பேச்சு எழுந்து விட்டிருக்கிற, அடுத்த முறை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கக் கூடும என்பதாக.
அவர் படும் அல்லல், காஞ்சி கிழமை இதழ்

தமிழகத்தில் இன்று காணப்படும் உணர்ச்சியை திளமையுடன் பயன்படுத்தி இந்தி எதிர்ப் புணர்ச்சி மீது கட்டப்பட்ட காசு காணவேண்டும தமிழகத்தில்.
கடைபயணம், காஞ்சி, கிழமை இதழ் - 20.06.1865

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai