(மானா
மதுரையிலே, மாபெரிய கூட்டத்திலே - என்ற மேட்டு)
கல்கத்தா நகரத்திலே, காங்கிரசு
கூட்டத்திலே
கல்லடியும் மணணடியும் கண்டதது போதும் போதும்
- மாமா
இந்தக் காலம் இப்ப கெட்டிடவும் போமா.
காந்தியாரின் கருத்துப்படி நடத்திட வேணுமென்ற
கண்மூடி வாயடக்கி கைதூக்கி நின்றனரே - மாமா
இதைக் காலத்தின் கோலமென்ன லாமா?
நாமேநம் 'ஓட்' கொடுத்து
நல்லவரென்றே எடுத்து
நமது போசை கவிழ்த்ததாலே நாடுமிக சிரித்திடுதே
- மாமா
இந்த நாசகாலச்செயல் நமக்கும்
ஆகுமா?
வங்கத்தின் வீரரென்றும் வாட்போரில் தீரரென்றும்
கொக்கரித்துப பூஜைசெய்து கொண்டாடி வந்தோமே
- மாமா
இந்தக் கோபமும் மனஸ்தாபமும்
இப்போ ஆமா?
என்னசெய்தார் ஏதுசெய்தார் எவருக்கவர் தீங்கு செய்தார்
பண்ணிட்ட குற்றந்தான் என்ன பகருமே நீருமிப்போ
- மாமா
இரு பாபம் மிகப்பாபம் அல்ல
வாமா?
சமட்டியை ஒழித்திடவே சமர்செய்ய வேணுமென்று
சைன்னியத்தைத் திரட்டிவந்தால் சரியது அல்லவோ
- மாமா
இப்போ ஏங்கறாரே ஏசுறாரே
வீண்போமா?
புரட்சிக் கொடி உயர்த்திப் போர் தொடுப்பேனென்று வறிப்
போசும் வெளிக் கிளம்பினாரே பொல்லாத காலமிது
- மாமா
நாம் பூரிப்பு அடைந்திடவும் போமா?
(குடியசது
- 28.05.1939)
'ஓட்' - வாக்கு
'போசு' - சுபாஷ் சந்திரபோசு